சிவத்தலங்கள் பலவற்றுள் சிற்சில தலங்கள் ஒவ்வொரு வகைச் சிறப்பு காரணமாகத் தொகுதி களாக வகுக்கப் பெற்றும் போற்றப்பட்டும் வருகின்றன.
தென் கயிலாயத் தலங்கள்: காளத்தி, திருச்சிராப்பள்ளி, திரிகோணமலை என்ற மூன்று தலங்கள்.
பஞ்சபூதத் தலங்கள்: திருவாரூர் அல்லது காஞ்சிபுரம் பிருதிவி தலம்; திருவானைக்கா
அப்புத்தலம்; திருவண்ணாமலை தேயுத்தலம், காளத்தி வாயுத்தலம்; சிதம்பரம் ஆகாயத் தலம்.
பஞ்ச சபைத் தலங்கள்: திருவாலங்காடு ரத்தினசபை; சிதம்பரம் கனகசபை; மதுரை இரஜிதசபை; திருநெல்வேலி தாமிரசபை; திருக்குற்றாலம் சித்திரசபை.
பஞ்ச காட்டுத் தலங்கள்: திருவெண்பாக்கம் இலந்தைக்காடு; திருப்பாசூர் மூங்கிற்காடு; திருவாலங்காடு ஆலங்காடு; திருவெவ்வூர் ஈக்காடு; திருவிற்கோலம் தர்ப்பைக்காடு.
காசிக்கு சமமான தலங்கள்: திருவெண்காடு, திருவையாறு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருச்சாய்க்காடு, திருவாஞ்சியம்.
மூன்று காயாரோகணத் தலங்கள்: காஞ்சி, குடந்தை, நாகப்பட்டினம்.
மூன்று மயானங்கள்: காஞ்சி, திருக்கடவூர், திருநாவலூர்.
எட்டு வீரட்டான தலங்கள்: சிவபெருமான் அசுரர் முதலியோரைத் தண்டித்த எட்டுத் தலங்கள்.
திருக்கண்டியூர்- பிரம்மாவின் 5-ஆவது தலையைக் கொய்தது;
திருக்கோவலூர்- அந்தகாசுரனைக் கொன்றது;
திருவதிகை- திரிபுரம் எரித்தது;
திருப்பறியலூர்- தக்கன் சிரங்கொய்தது;
திருவிற்குடி- ஜலந்தராசுரனைக் கொன்றது;
வழுவூர்- கஜாசுரனைக் கொன்றது;
திருக்குறுக்கை- காமனை எரித்தது;
திருக்கடவூர்- யமனை உதைத்தது.
ஏழு விடங்கத் தலங்கள்: உளியால் செதுக் கப்படாமல், தான்தோன்றியாக- சுயம்புவாகச் சிவபெருமான் விளங்கும் தலங்கள். இத்தலங் களில் உள்ள உற்சவ மூர்த்திகளில் சோமாஸ்கந்த மூர்த்தி விசேஷம். இம்மூர்த்தம் வீதிவலம் வரும் பொழுது ஒரு தனி நடனமாடிக் கொண்டு வருவர். இவ்வகையாலும் இத்தலங்கள் விசேடம்.
திருவாரூர்: வீதி விடங்கர்- அசபா நடனம்
திருநள்ளாறு: நகவிடங்கர்- உன்மத்த நடனம்.
நாகைக் காரோணம்: சுந்தர விடங்கர்- பாராகார தரங்க நடனம்.
திருக்காறாயில்: ஆதிவிடங்கர்- குக்குட நடனம்.
திருகோளிலி: அவனிவிடங்கர்- பிருங்க நடனம்.
திருவாய்மூர்: நீலவிடங்கர்- கமல நடனம்.
திருமறைக்காடு: புவனி விடங்கர்- அசம்பாத நடனம்.
No comments:
Post a Comment